Saturday, March 19, 2011

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 3

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 3


மகிழ்ச்சி குறைய காரணங்கள்:-

பொதுவாக கீழ்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய எந்தெந்தக் காரணங்கள் என்பதை குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக எழுதி கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டை சச்சரவுகள்.

2. ஒருவரை ஒருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.

4. விரும்பியதை பெற இயலாமை.

5. ஒருவரை ஒருவர் நம்பாமை.

6. ஒருவர் மீது ஒருவர் அக்கரை காட்டுவதில்லை.

7. உல்லாசப்பயணம் போக இயலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருட்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.

12. விட்டுக் கொடுக்கும் பண்புகள் குறைவு.

13. ஒருவர் மனது புண்படும்படியாக மற்றவர் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

மற்றும் வேறு சில காரணங்கள்.



உங்கள் பங்கு


உங்கள் குடும்பம் மகிழ்வாய் இருக்க அல்லது அதில் மகிழ்ச்சி குறைய தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து குறைப்போக்கி மகிழ்ச்சி கொண்டு வர வேண்டும். குறை களைய சில:-

1) அன்பாக பேசுவது.

2) பிறர் மீது அக்கரைக் காட்டுவது.

3) வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.

4) குறைக் கூறாமல் இருப்பது.

5) சொன்னதை செய்துக் கொடுப்பது.

6) இன்முகத்துடன் இருப்பது.

7) முன் மாதிரியாக நடந்துக் கொள்வது.

8) பிறரை நம்புவது.

9) ஒன்றாக உல்லாச பயணம் போக விரும்புவது.

10) பணிவு.

11) எதையும் எடுத்த இடத்தில் வைப்பது.

12) பிறர் வேலைகளில் உதவுவது.

13) பிறருக்கு விட்டுக் கொடுப்பது.

14) பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.

15) சுறுசுறுப்பு.

16) சிறிய விஷசங்களைக் கூடப் பாராட்டுவது.

17) புதிய முயற்களை ஊக்குவிப்பது.

18) நகைச்சுவையாகப் பேசுவது.

19) அதிகமாக வேலை செய்ய விரும்புவது.

20) செலவுகளை குறைக்க ஆலோசனைக் கூறுவது.

21) நேரம் தவறாமை.

22) தற்பெருமை பேசாமல் இருப்பது.

23) தெளிவாகப் பேசுவது.

24) நேர்மை.

25) பிறர் மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பது.

மற்றும் உங்களுக்கு தோன்றும் நல்ல விசயங்களை, இத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள்.


நமக்காக மேலும் தொடரும்..........

No comments: