ஏனுங்க புருசமார்களுக்கு சொன்னீக. பொண்டாட்டிமார்களுக்குனு.... ஏங்கிக்கிட்டு இருந்தவர்களுக்கு, இதோ... இதோ......
மனைவியிடம் கணவன் எதிர்ப்பார்ப்பது என்ன?
1. ஸ்கூல், ஆபீஸ் டயம் தெரிந்து அதற்கு முன் தயாரித்தல்.
2. காலை 6 மணிக்கு முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம். ( கிண்டல் செய்வது போல் அல்ல )
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரைத் தாயக மதிக்க வேண்டும்.
6. பெண்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பண்ணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன் தம்பி பிரிப்புக் கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக் கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனைச் சந்தேகப் படக் கூடாது.
12. குடும்ப விசயங்களை வெளியேச் சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன் மற்றும் சாப்பிடும் போது பிரச்சனைகளைப் பேசக்கூடாது. ( தம்பி வந்தியதேவன்
சோமசுந்தரம் சொல்லிட்டேன் சரியா?)
15.கணவர் வழி உறவினரையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தைப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.
20. பிட்பாகெட் அடிக்கக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்திற்கு ஆடை அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தைகளை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. கணவர் வீட்டுக்கு வரும்போது நல்ல அபிப்ராயம் வருவது போல் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
28. ருசியாக சமைக்க வேண்டும்.
29. அன்பாக பரிமாற வேண்டும்.
30. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
31. கடவுள் நம்பிக்கை வேண்டும்.
32. தெளிவாக பேச வேண்டும்.
33. எடுத்துரைக்கும் விதம் தெரிய வேண்டும்.
34. தேவையற்றதை வாங்கி பணமுடக்கம் செய்யக்கூடாது.
35. அதிகம் சினிமா, டிவி (சின்னத்திரை) பார்க்கக் கூடாது.
36. உடற்பயிற்ச்சி செய்து உடம்பை "ஸ்லிம்" ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஆதரவாய வாழ்வது எப்படி?
1. கணவன் - மனைவி ஒருமித்த உணர்வினராய் இருக்க வேண்டும்.
2. கணவன்பால் மனைவிக்குப் பரிவும் பாசமும் இயல்பாகவே ஏற்பட வேண்டும்.
3. ஏற்றத்தாழ்வான மனப்பான்மை அறவே இருத்தல் கூடாது.
4. ஈருள்ளங்களும் ஓர் உள்ளவுணர்வு பெற வேண்டும்.
உள்ள உணர்வு என்பது என்ன?
உணவிற்கு சுவைக்கு அதிகப்படியாக உப்பு இருக்கக் கூடாது. அதிகமானால் உணவு சுவைக்காது. அதுபோல வாழ்வில் ஊடல் (பிணக்கு) நீளக்கூடாது. நீண்டால் வாழ்க்கை இரசிக்காது. எனவே, கணவன் - மனைவியர் தம்பால் எழுகின்ற கருத்து வேறுபாடுகட்கு அவ்வேறுபாடுகளை மறந்து அன்பொத்த வாழ்க்கை வாழ வேண்டும். ஊடலைக் கசப்பாக்க் கொள்ளாது, தாம் கூடி வாழும் காதல் வாழ்விற்கு உரிய இன்ப நிகழ்ச்சியாக கருத வேண்டும். இதையே வள்ளவப்பெருந்தகை திருக்குறளின் எல்லைக் குறளாக,
" ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு
இன்பம் கூடி முயங்கப் பெறின். "
என்று கூறியுள்ளார். இவ்வுணர்வுகள் இருபாலரிடம் வேரூண்றித் தளிர்த்தால், பிணக்குகள் அறவே அகலும் என்பது ஒருதலை.
அப்பாடி பாதி தாண்டியாச்சி. மிச்சத்த அடுத்ததிலே.
என்னங்க அது?
படிச்சி பாருங்களேன், என்ன அவசரம்?
No comments:
Post a Comment