- 4 -
இப்போது நான் கூறுகின்ற செய்திகள் , எங்கள் முப்பாட்டனார் காலத்திலிருந்து எங்கள் வியாபாரத்தைப் பற்றியும், வீடு, ஊர் அமைப்புகளைப் பற்றியும் பொதுவான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்ததாக இல்லாமல், தெரிந்ததை, கேள்விப்பட்டதை கூறுகிறேன். எங்கள் ஊருடன் மற்ற ஊர்களை இணைக்கும் முக்கியமான சாலை ( ) , எங்கள் ஊருக்கு வடப்புறத்தில் கிழமேற்காக செல்கிறது. மழை காலங்களில், ஊரின் வடபுறத்தில் உள்ள குன்றிலிருந்தும் , முக்கிய சாலையிலிருந்தும்,வடபுறத்திலுள்ள வீதிகளிலிருந்தும் தென்கிழக்கை நோக்கிச் செல்லும் மழைநீர் அதிக அளவில், எங்கள் வீடு வழியாக, இன்றும் செல்கிறது. பெருத்த அளவில் மொத்த, சில்லரை வியாபாரத்திலும் கொடிக்கட்டி பறந்ததாலும், மிராஸ்தாரர்கள் என்னும் நிலசுவாந்தாரர்கள் (நில உரிமையாளர்கள் )இருந்ததால், அதிக போக்குவரத்தும், இந்த வீதியில் தான். எனவே எங்கள் வீதிக்கு 'ராஜவீதி' என்ற பெயராம்.
Tuesday, August 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment