சிறு வயதிலேயே நோய்வாய் பட்டு படுக்கையிலும், தனிமையிலும் அதிக நாட்கள் கழிந்து வருவதால், சிறு வயது முதலே எண்ணங்கள் சுழன்றடித்தாலும், அவ்வப்போது சூழ்நிலைகளுடன் முடிந்து விடும். அதன் தாக்கம் தொடராது.
ஆனால் மாநகருக்கு குடிப்பெயர்ந்த பின் சுழன்றடிக்கும் வேகம் மிக அதிகமானது. மேலும் இந்த தரவுகள் (Blogs)ஆரம்பித்த பின்னோ, கட்டுப்படுத்த முடியாத அளவில் மிகமிக அதிகமாக உள்ளது. எதை முதலில் எழுதுவது. எப்படி,எதற்கு, ஏன், எவ்வாறு என்று பலக் கேள்விகள் இரவுபகலாக மண்டையை குடைந்துக் கொண்டே இருக்கிறது.
அதனால் தனித்திருக்கிறேன், விழித்திருக்கிறேன் பல நேரங்களில், எண்ணங்களின் வேகமான ஓட்டத்தினால், தரவுகளில் பதிப்பதற்கு கைகளுக்கு சக்தியில்லாமல் தடுமாறுகிறேன். பல நினைவுகள் நினைவோட்டத்திலிருந்து அவ்வப்போது விலகி சென்று மிண்டும் ஏதாவது ஒரு சமயத்தில் இணைகிறது, பிரிகிறது.
கூறுகின்ற செய்திகளை ரத்தின சுருக்கமாக கூறிவிட நினைக்கின்றேன். அது முடியும் செயலாக தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்ல நினைக்கின்ற கருத்துகளை நீங்கள் முழுமையாக புரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆதங்கம் நிறைய இருப்பதால்.
Monday, August 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment