- 4 -
இப்போது நான் கூறுகின்ற செய்திகள் , எங்கள் முப்பாட்டனார் காலத்திலிருந்து எங்கள் வியாபாரத்தைப் பற்றியும், வீடு, ஊர் அமைப்புகளைப் பற்றியும் பொதுவான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்ததாக இல்லாமல், தெரிந்ததை, கேள்விப்பட்டதை கூறுகிறேன். எங்கள் ஊருடன் மற்ற ஊர்களை இணைக்கும் முக்கியமான சாலை ( ) , எங்கள் ஊருக்கு வடப்புறத்தில் கிழமேற்காக செல்கிறது. மழை காலங்களில், ஊரின் வடபுறத்தில் உள்ள குன்றிலிருந்தும் , முக்கிய சாலையிலிருந்தும்,வடபுறத்திலுள்ள வீதிகளிலிருந்தும் தென்கிழக்கை நோக்கிச் செல்லும் மழைநீர் அதிக அளவில், எங்கள் வீடு வழியாக, இன்றும் செல்கிறது. பெருத்த அளவில் மொத்த, சில்லரை வியாபாரத்திலும் கொடிக்கட்டி பறந்ததாலும், மிராஸ்தாரர்கள் என்னும் நிலசுவாந்தாரர்கள் (நில உரிமையாளர்கள் )இருந்ததால், அதிக போக்குவரத்தும், இந்த வீதியில் தான். எனவே எங்கள் வீதிக்கு 'ராஜவீதி' என்ற பெயராம்.
Tuesday, August 21, 2007
Monday, August 20, 2007
நினைவுகளே நில்லுங்கள் !..........(1)
சிறு வயதிலேயே நோய்வாய் பட்டு படுக்கையிலும், தனிமையிலும் அதிக நாட்கள் கழிந்து வருவதால், சிறு வயது முதலே எண்ணங்கள் சுழன்றடித்தாலும், அவ்வப்போது சூழ்நிலைகளுடன் முடிந்து விடும். அதன் தாக்கம் தொடராது.
ஆனால் மாநகருக்கு குடிப்பெயர்ந்த பின் சுழன்றடிக்கும் வேகம் மிக அதிகமானது. மேலும் இந்த தரவுகள் (Blogs)ஆரம்பித்த பின்னோ, கட்டுப்படுத்த முடியாத அளவில் மிகமிக அதிகமாக உள்ளது. எதை முதலில் எழுதுவது. எப்படி,எதற்கு, ஏன், எவ்வாறு என்று பலக் கேள்விகள் இரவுபகலாக மண்டையை குடைந்துக் கொண்டே இருக்கிறது.
அதனால் தனித்திருக்கிறேன், விழித்திருக்கிறேன் பல நேரங்களில், எண்ணங்களின் வேகமான ஓட்டத்தினால், தரவுகளில் பதிப்பதற்கு கைகளுக்கு சக்தியில்லாமல் தடுமாறுகிறேன். பல நினைவுகள் நினைவோட்டத்திலிருந்து அவ்வப்போது விலகி சென்று மிண்டும் ஏதாவது ஒரு சமயத்தில் இணைகிறது, பிரிகிறது.
கூறுகின்ற செய்திகளை ரத்தின சுருக்கமாக கூறிவிட நினைக்கின்றேன். அது முடியும் செயலாக தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்ல நினைக்கின்ற கருத்துகளை நீங்கள் முழுமையாக புரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆதங்கம் நிறைய இருப்பதால்.
ஆனால் மாநகருக்கு குடிப்பெயர்ந்த பின் சுழன்றடிக்கும் வேகம் மிக அதிகமானது. மேலும் இந்த தரவுகள் (Blogs)ஆரம்பித்த பின்னோ, கட்டுப்படுத்த முடியாத அளவில் மிகமிக அதிகமாக உள்ளது. எதை முதலில் எழுதுவது. எப்படி,எதற்கு, ஏன், எவ்வாறு என்று பலக் கேள்விகள் இரவுபகலாக மண்டையை குடைந்துக் கொண்டே இருக்கிறது.
அதனால் தனித்திருக்கிறேன், விழித்திருக்கிறேன் பல நேரங்களில், எண்ணங்களின் வேகமான ஓட்டத்தினால், தரவுகளில் பதிப்பதற்கு கைகளுக்கு சக்தியில்லாமல் தடுமாறுகிறேன். பல நினைவுகள் நினைவோட்டத்திலிருந்து அவ்வப்போது விலகி சென்று மிண்டும் ஏதாவது ஒரு சமயத்தில் இணைகிறது, பிரிகிறது.
கூறுகின்ற செய்திகளை ரத்தின சுருக்கமாக கூறிவிட நினைக்கின்றேன். அது முடியும் செயலாக தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்ல நினைக்கின்ற கருத்துகளை நீங்கள் முழுமையாக புரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆதங்கம் நிறைய இருப்பதால்.
Subscribe to:
Comments (Atom)