-3-
இது ஏதோ வாரிசுகளின் பட்டியலுக்காக மட்டுமில்லங்க,அறிமுக படலத்தை முடித்துவிட்டு,வரலாற்றை ஆரம்பிக்கலாமுனு இருந்தேங்க. ஆனா அறிமுக படலம் இன்னும் ரொம்ப நீளம் உள்ளது. அதனால் இத்துடன் நிறுத்திக் கொண்டு, அவ்வப்போது அந்த இடத்திற்கு ஏற்றப்படி வாரிசுகளின் அறிமுகத்தை, முடிந்தவரை உங்களுக்கு புரியும்படி விளக்க முயற்சி செய்கிறேன். எங்கள் அப்பா திரு.P.A.மாணிக்கம் செட்டியார் அவர்களுக்கு, தற்போது 87 வயது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் தற்போது செய்ய,முடிக்க,செல்ல வேண்டிய கடமைகளென கருதுவதை, திரும்ப,திரும்ப நினைவுக்கு கொண்டு வந்து புதுபித்துக் கொள்கிறாரே தவிர, மிக பழைய மற்றும் பல நினைவுகள் ஒவ்வொன்றாய் அவரை விட்டு விலகுவதாகவே கருதுகிறேன்.ஏனென்றால் பல நிகள்வுகளை கேட்கும்போது, நினைவிலில்லை என கூறி விட்டு பிறிதொரு சமயத்தில், ஞாபகத்ததிற்கு வரும்போது கூறுகிறார்.தற்போதைய சூழ்நிலையில் எனக்கு தெரிந்தவரை, பழைய குடும்ப செய்திகளை அதிக அளவில் தெரிந்திருந்து கூறக் கூடியபெரியவர்கள், தகவல் தெரிந்தவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்பது தான்.நான் சிறு (5) வயதிலேயே, நோய்வாய் பட்டுவிட்டதால், எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் பலவற்றில் கலந்துக் கொண்டதுகூட கிடையாது. எப்போதாவது ஒரிரு முறைகள் கேள்விப்பட்ட செய்திகளே, பெரிய கதைப் போன்று இருந்ததாலும், என்னுடைய எண்ணங்களை வெளியிட, வடிகாலாய் கூகுள் வலைதள தரவு (google. blogspot.com)இருந்ததாலும்,கற்பனைக் கதைகளை எழுதுவதைவிட, ஒரு நிஜமான வரலாற்றையே படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியதாலும்,மிக்க மகிழ்ச்சியுடன் எழுத ஆரம்பித்து விட்டேன். பிறகு தான் அதிலுள்ள சிரமங்களை உணர்ந்தேன். ஆனாலும் எனது அப்பா மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்புடன், வெற்றிகரமாக பதிப்பிப்பேன் என்ற நம்பிக்கையுடன்....... (உறவினர்களே ! இதில் விடுப்பட்ட, திருத்த வேண்டிய அல்லது தெரிந்த செய்திகள் இருப்பின், தயங்காமல், வருத்தப்படாமல் கூறுங்கள். மகிழ்வுடன் திருத்திக் கொள்ளலாம்.)
இது ஏதோ வாரிசுகளின் பட்டியலுக்காக மட்டுமில்லங்க,அறிமுக படலத்தை முடித்துவிட்டு,வரலாற்றை ஆரம்பிக்கலாமுனு இருந்தேங்க. ஆனா அறிமுக படலம் இன்னும் ரொம்ப நீளம் உள்ளது. அதனால் இத்துடன் நிறுத்திக் கொண்டு, அவ்வப்போது அந்த இடத்திற்கு ஏற்றப்படி வாரிசுகளின் அறிமுகத்தை, முடிந்தவரை உங்களுக்கு புரியும்படி விளக்க முயற்சி செய்கிறேன். எங்கள் அப்பா திரு.P.A.மாணிக்கம் செட்டியார் அவர்களுக்கு, தற்போது 87 வயது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் தற்போது செய்ய,முடிக்க,செல்ல வேண்டிய கடமைகளென கருதுவதை, திரும்ப,திரும்ப நினைவுக்கு கொண்டு வந்து புதுபித்துக் கொள்கிறாரே தவிர, மிக பழைய மற்றும் பல நினைவுகள் ஒவ்வொன்றாய் அவரை விட்டு விலகுவதாகவே கருதுகிறேன்.ஏனென்றால் பல நிகள்வுகளை கேட்கும்போது, நினைவிலில்லை என கூறி விட்டு பிறிதொரு சமயத்தில், ஞாபகத்ததிற்கு வரும்போது கூறுகிறார்.தற்போதைய சூழ்நிலையில் எனக்கு தெரிந்தவரை, பழைய குடும்ப செய்திகளை அதிக அளவில் தெரிந்திருந்து கூறக் கூடியபெரியவர்கள், தகவல் தெரிந்தவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்பது தான்.நான் சிறு (5) வயதிலேயே, நோய்வாய் பட்டுவிட்டதால், எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் பலவற்றில் கலந்துக் கொண்டதுகூட கிடையாது. எப்போதாவது ஒரிரு முறைகள் கேள்விப்பட்ட செய்திகளே, பெரிய கதைப் போன்று இருந்ததாலும், என்னுடைய எண்ணங்களை வெளியிட, வடிகாலாய் கூகுள் வலைதள தரவு (google. blogspot.com)இருந்ததாலும்,கற்பனைக் கதைகளை எழுதுவதைவிட, ஒரு நிஜமான வரலாற்றையே படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியதாலும்,மிக்க மகிழ்ச்சியுடன் எழுத ஆரம்பித்து விட்டேன். பிறகு தான் அதிலுள்ள சிரமங்களை உணர்ந்தேன். ஆனாலும் எனது அப்பா மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்புடன், வெற்றிகரமாக பதிப்பிப்பேன் என்ற நம்பிக்கையுடன்....... (உறவினர்களே ! இதில் விடுப்பட்ட, திருத்த வேண்டிய அல்லது தெரிந்த செய்திகள் இருப்பின், தயங்காமல், வருத்தப்படாமல் கூறுங்கள். மகிழ்வுடன் திருத்திக் கொள்ளலாம்.)