Friday, June 22, 2007

நம்ம குடும்பமிது !!!

-1-


முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாப்பிரெட்டிபட்டி கிராமத்திலிருந்து, தற்போதைய தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுக்காவை சேர்த்த பையர்ந்ததம் என்ற கிராமத்திற்கு, சுமார் 175 வருடங்களுக்கு முன் பொட்டல்வெளியாய், குக்கிராமமாய் இருந்த இந்த ஊருக்கு, எமது தகப்பனாரின்(திரு.P. A .மாணிக்கம் செட்டியாரின் பாட்டனார்.திரு.பெத்தண்ண செட்டியார்(அப்பாவின் தாத்தா), வியாபார நிமித்தமாய் குடிபெயர்ந்தாராம். இவருக்கு இரண்டு மனைவிகளாம். முதல் மனைவி திருமதி.(...........................) அவர்களுக்கு ஒருமகனும், முதல் மனைவி காலமானபின், இரண்டாவது மனைவியாக ( திருமதி. சுந்தர லட்சுமி ) அவர்களைத் திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்கள். அவரின் மனைவியோ, வாழும் இந்த ஊரே கிராமம். அப்படியிருக்கையிலே, பொட்டல்வெளியான குக்கிராமத்திற்கு,உடன் வர மறுத்து விட்டாராம். அதனால் விதவையான அவரின் சகோதரி உடனிருந்து கவனித்துக் கொள்ள, சிறிது காலம் கழிந்த பின்பு மனம் மாறியவர். கணவருடன் வாழ வந்திருக்கிறார். அவர்களின் வாரிசுகளாக.......

Thursday, June 7, 2007

இருக்குதுங்க !!!!.......

எவ்வளவோ இருக்குதுங்க, நம்ம குடும்பத்தைப் பத்தி எழுத. ஆவலாக காத்திருக்கிறேன்.உங்க தகவலையும் கருத்துக்களையும் அறிய.இனிய உறவினர்களே! நம்ம குடும்பத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் அறியாத்தை, நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் ஆரம்பித்திருக்கிறேன்.அதனால் இதில் ஏதேனும் தகவல்கள் விடுப்பட்டாலோ, தவறுகள் இருந்தாலோ, உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தயங்காமல் தெரிவியுங்கள்.திருத்தங்களை வெளியிடலாம். ஓரிரு நாளிலே நான் எழுத ஆரம்பிச்சிடுறேங்க!

அன்புடன் உங்கள்,
பத்ரி நாராயணன்.A.M.
07/06/2007.